நாளிதழ் செய்திகள்
 

திருநாவுக்கரசு எனும் நான்
முகநூல்
20/06/2017

பெற்றோர்கள் இருவரும் ஆசிரியர்கள் என்பதால் சிறுவயதில் இருந்தே புத்தகம் படிப்பது, ஒழுக்கமான வாழ்க்கை முறை என ஒழுங்குமுறைக்குள் வளர்க்கப்பட்டவர் திருநாவுக்கரசு.

ஆரம்பத்தில் வேண்டாவெறுப்பாக புத்தகங்களை படிக்க ஆரம்பித்தார். படித்ததால் கிடைத்த தகவல்களை சக நண்பர்களிடம் பகிர்ந்து போது அவருக்கு கிடைத்த வரவேற்பு மேலும் பல புத்தகங்களை படிக்க தூண்டுடியது என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
தேனி ரெங்கநாதபுரத்தில் பள்ளிப்படிப்பை முடித்த திருநாவுக்கரசு, கல்லூரிப் படிப்பை மதுரை சோழவந்தான் விவேகானந்தர் கல்லூரியில் படித்து இயற்பியல் பட்டத்தை பெற்றார், மதுரை காமராஜர் கல்லூரியில் MSC பட்டம் பெற்றார் பின்னர் சட்டக் கல்லூரியில் பயின்று பட்டமும் பெற்றார் அறிவியல் பாடத்தில் பயின்றாலும் தமிழ் மீது மிகவும் ஆர்வம் கொண்டவர் திருநாவுக்கரசு பாரதியார் பாரதிதாசன் கவிதைகள் மீதும் குறிப்பாக திருக்குறள் மீது தீராத பற்று கொண்டவர் நம் திருநாவுக்கரசு.

தமிழ் புத்தக வாசிப்பு தன்னைப் பெரிதும் உயர்த்தியது என்கிறார். இவர் எப்படி காவல் துறைக்கு வந்தீர்கள் என்ற கேள்விக்கு?
வினா வினாடி நிகழ்ச்சி ஒன்று தனது வாழ்க்கையை புரட்டிப் போட்டது அதன் காரணமாகவே நான் இன்று உங்கள் முன் காவல்துறை அதிகாரியாக அமர்ந்து உள்ளேன் என்றார்.

வினா வினாடி போட்டி ஒன்றில் பார்வையாளராக பங்கேற்ற திருநாவுக்கரசு அந்த போட்டியில் பங்கேற்றவர்களை விட பார்வையாளர்களாக இருந்த திருநாவுக்கரசு அநேக கேள்விகளுக்கு பதில் அளித்தார், அப்போது அங்கு உடன் இருந்த தனது நண்பர் ஒருவர் நீங்கள் ஏன் குரூப் தேர்வுக்கு முயற்சி செய்யக்கூடாது என்று கூறினார். இது அவரின் சிந்தனையைத் தூண்ட அடுத்த முயற்சியாக குரூப் 1 தேர்வுக்கு தயாராகும் பணியை அவர் தேர்வு செய்தார். அவர் எழுதிய முதல் குரூப் 1 தேர்விலேயே வெற்றியும் பெற்றார்.

ஒருவேளை அங்கு கேட்கப்பட்ட கேள்விகள் எனக்கு தெரிந்த கேள்வியாக இருக்கலாம். அதனால் அந்தத் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் ஒன்றும் அறியாதவர்கள் என்று கூற முடியாது என்றார்.
1999ல் திருப்பூரில் முதன்முறையாக DSP பணியமர்த்தப்பட்டார். 2013இல் மதுரை துணை ஆணையர் 2015இல் கிருஷ்ணகிரியில் துணை ஆணையராக பணியாற்றி சிறப்பித்தார்.

இடையில் 7 ஆண்டுகள் STF ஆக வீரப்பனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார், முறுக்கேறிய உடம்பு அங்கு ஈடுபட்ட பயிற்சியின் மூலமாக வந்திருக்கலாம்.

வால்டர் தேவாரம், நடராஜ், விஜயகுமார் கீழ் பணியாற்றிய திருநாவுக்கரசு இதன் பின்னர் பதவி உயர்வு பெற்றார் 2015ஆம் ஆண்டு IPS தகுதிக்கு தேர்வானார். DGP விஜயகுமாரின் வீரப்பன் வேட்டை புத்தக வெளியீட்டில், கவிதை மழையில் பாராட்டு வாசிக்க பெரிதும் புகழ்ந்து உள்ளார் திரு.விஜயகுமார்.

திருக்குறளை பெரிதும் நேசிக்கும் திருநாவுக்கரசு தான் துணை ஆணையராக இருந்த காலக்கட்டத்தில் காலையில் ஒரு திருக்குறளை சொல்லிவிட்டுத்தான் காவல் துறை அதிகாரிகளுக்கு பணி பிறப்பிப்பாராம். பல்வேறு பணிகள் காரணமாக மன உளைச்சலில் இருக்கும் போலீசார் சற்று மன நிம்மதியாக பணியை துவக்குவார்கள் என்றார்.

தற்போது ஒரு குறல் ஒரு பொருள் என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதி வருகிறார். இதுதவிர ஆளுமை குறித்த கட்டுரைகள் எழுதுவது கருத்தரங்கம், பள்ளி கல்லூரி விழாக்களில் பேசுவது இவரது வழக்கமாகும். இளைஞர்கள் தங்கள் முன்னேற்றத்திற்காக தன்னம்பிக்கை மட்டும் அல்ல எதிர்மறை எண்ணங்களையும் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி உன்னுள் யுத்தம் செய் என்ற புத்தகத்தையும் எழுதி வருகிறார்.

காக்கி சட்டை அதிகாரிகள் கடுமையானவர்கள் என்பதை பொய்ப்பிக்கும் வண்ணம் இலக்கிய இதயத்துடனும், எழுத்தாளுமையுடனும் வலம் வருகிறார் திருநாவுக்கரசு. இத்தனை பணிகளையும் கடினமான காவல்துறை பணிகள் உடனேயே செய்து வருகிறார்.

திருநாவுக்கரசு சென்னைக்கு புதிதல்ல 2011 ல் தி.நகர் காவல் நிலையத்தில் துணை ஆணையராக பொறுப்பேற்ற சில காலத்தில் தி.நகர் சுற்றி செயல்படும் சூதாட்டம் கிளப்புகள், கேளிக்கை விடுதிகள் அனைத்தையும் ஒழித்தார். ஒரு நம்பர் லாட்டரி மையங்களையும் ஒழித்தார். இதனால் சிலரது கோபத்திற்கு ஆளானார். வேண்டுமென்றே வம்பிலுத்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டாலும் இன்றும் சென்னை மக்கள் மனதில் தீரமிக்க துணை ஆணையராக திருநாவுக்கரசு இருக்கிறார்.

நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையராக தனது பணியில் சிறந்து விளங்க வாழ்த்துகள் தெரிவிக்கலாம்.