குடிகார போலிசாரும் அதிரடி IPS அதிகாரியும்.
சாப்ஷ் ரிப்போர்ட்
05/03/2016
குடிகார போலிசாரும் அதிரடி IPS அதிகாரியும்.
எல்லா துறைகளிலும் இருப்பது போலவே தமிழக காவல் துறையிலும் ஓயாத குடிகாரர்கள், முழு நேர குடிகாரார்கள் இருக்கிறார்கள். இவர்களால் காவல் துறைக்கு கெட்ட பெயர் அவர்களின் மனைவி மக்களுக்கு சொல்ல முடியாத துயரம்.
என்ன செய்யலாம்?
கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி திருநாவுக்கரசு ஐ.பி.எஸ் யோசித்தார். இந்த திருநாவுக்கரசு சந்தன புயல் வீரப்பனை தேடும் பிரிவில் சிறப்பாக பணியாற்றியவர். இவருக்கு ஆக்சன் கிங், அதிரடி போன்ற பெயர்கள் மக்களால் வழங்கப்பட்டுள்ளது.
தனிப்பிரிவு காவலர்கள் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் உள்ள முழு நேர குடிகாரர்களை பட்டியலிட்டார்.
காவலர், கிரேடு2 காவலர், தலைமை காவலர், உதவி ஆய்வாளர்கள் என 30பேர் அந்த பட்டியலில் இருந்தனர்.
முழு நேர குடிகாரர்களை திருத்தும் நோக்கில் ஒரு மறுவாழ்வு மையத்தை 28.2.2016 அன்று நண்பகல் 1 மணி முதல் 2.30 மணி வரை கிருஷ்ணகிரி அலுவலக வளாகத்திலேயே அனைவருக்கும் கவுன்சிலிங் கொடுத்தார்.
கவுன்சிலிங் கொடுத்து முடித்ததும் அத்தனை பேரும் ஒரே கூட்டணியாக சேர்ந்து கொண்டு எஸ்.பி அலுவலகம் அருகில் உள்ள குத்தாரப்பள்ளி பகுதி டாஸ்மாக் உடன் இணைந்த பாரில் மூக்குமுட்ட குடித்தனர்.
நமக்கு மட்டும் எஸ்.பி அட்வைஸ் செய்கிறார். தனிப்பிரிவில் எவ்வளவோ பேர் முழு நேர குடிகாராங்கலா இருக்காங்க நமக்கு தெரியாததா என்று கமெண்ட் அடித்தார்கள்.
இவர்களது நடவடிக்கைகள் பேச்சுக்கள் அனைத்தும் அதிரடி போலிஸ் திருநாவுக்கரசு கவனத்திற்கு போகிறது.
முழு நேர குடிகாரர்கல் 30பேரையும் குடியில் இருந்து விடுவிக்க 21 நாளைக்கு கடுமையான பயிற்சி கொடுக்க திட்டம் போட்டார்.
பர்கூர் போலிஸ் சரகத்திர்கு உட்பட்ட மல்லப்பாடி கிராமத்தில் ஒரு பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்து முழு நேர குடிகாரர்கள் 30 பேரையும் அங்கே அடைத்தார். 29.02.2016 அன்று முதல் 21 நாளும் அந்த வளாகத்தில் அவர்கள் மீளும் படியான மருந்து மாத்திரைகள் எக்ஸ்பெர்ட்டுகளின் ஆலோசனைகள் படி பயிற்சிகள் வழங்கப்பட்டது.
நல்ல உணவு, நல்ல ஓய்வு, நல்ல அறிவுரை அத்தோடு 21 நாடுகளுக்கும் ஆன் டூட்டி உடன் சம்பளம்.
இந்த 30 நபர்களின் குடும்பத்தார் பயிற்சி மையத்திற்கு வந்ததுதான் பார்க்க முடியும் பேச முடியும் அதுவும் குறிப்பிட்ட நேரத்தில் தான்.
2016 பிப்ரவரி 29 முதல் நடக்கும் இந்த குடிகாரர்களை திருத்தும் பயிற்சி முகாம் பற்றி அறிந்து. அந்த 30 போலிசாரின் மனைவி மக்கள் ஏகப்பட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். எஸ்.பி அதிரடி திருநாவுக்கரசை பாராட்டுகிறார்கள்.
இந்த மாதிரியான முயற்சியை தமிழ்நாடு முழுவதும் உள்ள எஸ்.பி க்கள் செய்தால் எப்படி இருக்கும். டி.ஜி.பி அவர்கள் அவசரமாக கவனிக்க வேண்டும் நல்ல காரியங்கள் பரவலாக நடக்க வேண்டும்.
ஐயா தங்களின் பதவி உயர்வு பற்றி அறிந்தேன், மிகவும் மகிழ்ச்சி நமது மாவட்டத்திற்கும் உங்களின் கிராமத்திற்கும் பெருமை சேர்த்து உள்ளீர்கள். மென்மேலும் வளர ஆண்டவனை வேண்டுகிறேன்.
S.P. JEGAN.தேனீ மாவட்டத்திற்கே பெருமை சேர்க்கும் திரு. திருநாவுக்கரசுவின் புகழ் அனைத்து மாவட்டங்களுக்கும் பரவட்டும். உங்களின் திருக்குறளோடு நாம் எனும் Whats App காணொளிகள் மிகவும் அருமை. இதுவரை திருக்குறளை படிக்காத நபர்களை கூட உங்களின் காணொளிகள் படிக்க வைக்கிறது.
சுருளிராஜ் பாண்டியன்.சின்னஞ்சிறு வயதில் உங்களை நான் தொடர்பு கொண்ட அனுபவத்தை நான் இப்போது என்னால் மறக்க இயலாது. உங்களின் திருக்குறளோடு நாம் இந்த காணொளிகள் இன்னும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கணும்.
Jegan SP.