நாளிதழ் செய்திகள்
 

நல்ல வார்த்தைகளை எதிர்பார்த்து ஏங்கும் உலகு
தினமலர்
10/09/2017

நல்ல வார்த்தைகளை எதிர்பார்த்து ஏங்கும் உலகு.

உற்சாகமூட்டும் நல்ல வார்த்தைகளுக்காக அனைவரும் ஏங்குகிரோம்.நல்ல வார்த்தைகளை எதிர்பார்த்து உலகம் ஓடுகிறது என சென்னை போலிஸ் நுண்ணறிவு பிரிவு துணை கமிஷனர் திருநாவுக்கரசு பேசினார்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் புத்தக பதிப்பாளர் சங்கம் சார்பாக மதுரை தமுக்கம் மைதானத்தில் 12 வது புத்தக திருவிழா நடக்கிறது. கருத்தரங்கில் புத்தக காட்சிக்குலு உறுப்பினர் சசிரேகா வரவேற்றார். சொல்லுக சொல்லில் பயனுடைய தலைப்பில் சென்னை போலிஸ் நுண்ணறிவு பிரிவு துணை கமிஷனர் திருநாவுக்கரசு பேசியதாவது.

கண்டுபிடிப்புகளின் அற்புதம் புத்தகங்கள். பூங்காக்களில் நடந்தால் வாசம் பிறக்கும் புத்தகங்களில் நடந்தால் ஞானம் பிறக்கும். புத்தகம் வாசிப்பு என்பது நம் சுவாசம் மட்டுமின்றி நம் சந்ததியின் சுவாசத்தையும் சுத்தப்படுத்தும்.

புத்தகங்களை பரிசு அளித்தால் அறிவார்ந்த சமூகத்தை படைப்பவர் என உங்கள் மீது தனி முத்திரை பாதிக்கப்படும். அறிவார்ந்த மனிதர்களால் சமூகத்தில் மாற்றம் ஏற்படும்.

மனிதனின் அடையாளம் சிந்தனை, செயல், சொல் 1891 செப்டம்பர் 11ல் சிகாக்கோ மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் சகோதர சகோதரிகலே என பேச்சை தொடங்கி போது பலத்த கைத்தட்டலுடன் பாராட்டு கிடைத்தது. அதுபோல வார்த்தைகளை சரியாக பயன்படுத்தினால் உறவுகள் ஒட்டும் வெற்றியாளராக முடியும்.

குழந்தைகளை உற்சாகம் நேர்மை ஊக்கப்படுத்தி வளர்த்தால் தன்னம்பிக்கை, நீதிநெறி, பாராட்டும் குணத்தை கற்றுக்கொள்வர். அவநம்பிக்கை பகைமையுடன் வளர்த்ததால் குற்ற உணர்வு சண்டையிடும் குணத்துடன் வளர்வர்.

அனைத்து இடங்களிலும் உற்சாகமூட்டும் நல்ல வார்த்தைகளுக்காக குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் ஏங்குகிரோம். நல்ல வார்த்தைகளை எதிர்பார்த்து இந்த உலகம் ஓடுகிறது.

வார்த்தைகள் ஒரு மாபெரும் சக்தி சாதிக்க நினைப்பவர்கலுக்கு உங்களால் முடியும் என உற்சாகமூட்டுங்கல். கெட்ட எண்ணம் வரும் போது தவறான சொற்களை பயன்படுத்த கூடாது. ஒரு முறை பயன்படுத்திய சொற்களை நாம் திரும்ப பெற முடியாது. ஆகையால் நல்ல சொற்களை பேசுவோம் வாழ்வில் முன்னேற்றம் அடைவோம்.